ஆதி காலத்தில் உலகின் பல பகுதிகளில் சிவலிங்க வழிபாடு இருந்து உள்ளது.
** வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது சிவன் கோவிலும், அதில் பெரிய சிவலிங்கமும் கடந்த 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை ஆய்வு செய்த போது 1000- ஆண்டு முற்பட்டது என தெரிய வந்ததது.
** தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா தீவில் பல சிவன் கோவில் காண முடிகிறது.
அங்கு உள்ள டெக்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்பு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
** ஜாவா தீவில் உள்ள கோவில்களில் இன்றும் திருவாசகம் ஓதுகிறார்கள். தமிழ் மொழி தெரியாது என்பதால் மந்திரம் போல் அதை உச்சரிக்கிறார்கள்.
** ஜாவா தீவுக்கு அருகே உள்ள சுமத்திரா தீவிலும் சிவன் கோவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அங்கே அர்த்த நாரீஸ்வரர் வடிவில் சிவன் காட்சி தருகிறார். மேலும் விநாயகர், நந்தி சிலைகளும் அங்கு உள்ளது.
** போர்னியா என்ற இடத்தில் ஒரு மலைக் குகையில் சிவன் சிலையுடன் விநாயகர் சிலையும் கண்டு பிடிக்கப்படுளது.
** சியாம் நாட்டில் பழமையன சிவன் கோவிலை இன்றும் காண முடிகிறது. இப்போதும் பொங்கல் விழா கொண்டாடுகிறர்கள்.
** பாபிலோனியாவில் 6000-ம் ஆண்டு முற்பட சிவன் கோவில்களும் சிவ வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் `சிவன்' என்ற பெயர் காணப்பட்டது.
பாபிலோனியர் தங்களது கடவுள்களில் ஒரு கடவுளை அழைக்கும் பெயர் `எல்சடை' என்பதாகும். இதற்கு `சிவந்த சடை உடையவன்' என்று பொருள்.
இங்கு கிடைத்த சிவபெருமான் சிலை காளை மீது நிற்பதாக உள்ளது.
** சிரியா நாட்டில் சிவன் சிலையும், அவரது உருவம் பொறித்த வெண்கல தட்டும் கிடைத்துள்ளது.
** க்ரேக்க நாட்டில் சிவ லிங்கங்களை பொது இடங்களில் நீராட்டி வழிபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
**சர்வம் சிவமயம்**
ஆதி சைவம்.


