வியாழன், 3 ஏப்ரல், 2014



முழுக்க முழுக்க செங்கல்லில் கூட இப்படி ஒரு கட்டிடத்தை கட்ட முடியுமா? அப்பர், சுந்தரர் தேவாரம் பாடும் போது, அவர்கள் காலத்தில் இப்படித்தானே இருந்திருக்கும் அந்த கோயில்கள்!! இத்தனை பெரிய மரம் முளைத்தும் விரிசல் கூட விடாமல் ஒரு செங்கல் கட்டிடம் அதனை இத்தனை அழகாய் தாங்கி தாக்கு பிடிக்கின்றதே என்று பெருமைபட்டுக்கொண்டாலும் சரி, இது போன்ற பொக்கிஷங்களை இன்று செய்ய தான் முடியாது என்றாலும் இருப்பவையேனும் காப்பாற்ற கூட முடியாத பணத்தின் பின் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறையினராக இருக்கிறோமே என்று நினைத்து வருத்தப்பாட்டலும் சரி.

அது உங்கள் மனநிலையை பொருத்தது. வெளிநாட்டு நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு இருந்தால் அவர்களிடம் இந்த படத்தை காட்டுங்கள், எங்கள் மண்ணில் திறமையான மனிதர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்று!

நாங்கள் நட்டு வைத்த மரங்களை காப்பாற்ற படாத பாடு பட்டோம், 100 ல் 90 மட்டும் தான் பிழைத்தது, ஆனால் இது போன்ற இடங்களில் வளரும் மரங்கள் தண்ணீர், மண் போன்ற எதுவும் இல்லாமல் செழித்து வளருகின்றது! அது போக இந்த கோயில் அய்யரை பார்த்து பேசிகொண்டிருந்தேன் நியுசிலாந்திருந்து ஒரு பெண்மணி இதை அதிசயமாக பார்த்துவிட்டு சென்றாராம், உதவுவதாய் கூறிச் சென்றிருக்கிறார் என்றார்.

கோயில் இருக்கும் இடம் தவிர சுற்றி பிளாட் போட்டு விட்டார்கள், இன்னும் கொஞ்ச நாளில் இதை இடித்தும் விடலாம், கோயிலுக்கு இருந்த சிவ லிங்கம் வெளியில் கிடப்பதை பார்த்தீர்களா? இடது புறமாக பாருங்கள், அதற்கு கீழே தங்கம் இருக்கும் என்று நினைத்து ஒரு குருப் அதை தோண்டி வெளியே எடுத்து வீசி விட்டுச் சென்றிருக்கின்றது.

இடம் காஞ்சிபுரம் அருகே பல்லூர்.





நன்றி Sasi Dharan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக