செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தெருவுக்குத் தெரு நடுச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கோயில்களைக் கட்டி அலப்பறை செய்வது யார்?

இது அதிபுத்திசாலிதனமான கேள்வி. கோயில்களை சுற்றி ரோடு போட்டு கோயில் சொத்தை திருடி கொண்டு பிறகு அந்த கோயிலையே தெருவோர கோயில் என்று மாற்றுவிடுகிறார்கள்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கிண்டி இரயில் நிலையத்தின் முன் புறம் உள்ள சிவன் கோயில்.

அந்த இடமே ஒரு காலத்தில் அதாவது சுதந்திரத்திற்கு முன்பு அந்த கோயிலுக்கு சொந்தமாக இருந்தது. இப்பொழுது அது தெருவோர கோயிலாக மாறி போகிறது.

பல ஆயிரக்கணக்கான கிராமங்களையும் கோயில்களையும் விழுங்கிதான் இந்த அசுர நகர வளர்ச்சி ஏற்படுகிறது.

இதற்கு ஆயிரகணக்கான உதாரணங்கள் தர முடியும். இப்படி அரைகுறையாக ஏதாவது உளறி கொட்ட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

நிலைமை இப்படி இருக்க…. இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்த கதையாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அதற்கு சொந்தமான வளங்களை ஜீரணித்து கடைசியில் அந்த கோயிலையே தெருவோர கோயில் என்று சொல்கிறார்கள்.. ஹ்ம்ம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக