திங்கள், 24 மார்ச், 2014

புயலுக்கு முன்னே அமைதி

மனைவி: நான் இறந்து விட்டால் நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?
கணவன்: கண்டிப்பாக மாட்டேன்!

மனைவி: ஏன்? மணமானவராக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி தானே? கணவன்: நிச்சயமாக, அதிலென்ன சந்தேகம்?

மனைவி: பின் ஏன் மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? கணவன்: சரி! செய்து கொள்கிறேன்.

மனைவி: ஓஹோ, அப்படியா? (ஒரு அடிபட்ட பார்வையுடன்!)
கணவன்: (சத்தமான பெருமூச்சும், கவலையும்!)

மனைவி: நம் வீட்டில் தான் வாழ்வீர்களா?
கணவன்: ஆம், இது நல்ல வீடு தானே.

மனைவி: அவளுடன் நம் மெத்தையில் தான் படுத்து உறங்குவீர்களா? கணவன்: பின் வேறெங்கு உறங்குவது?

மனைவி: என் காரை அவள் ஓட்ட அனுமதிப்பீர்களா?
கணவன்: அனுமதிக்கலாம், அது புதுசு தானே!

 மனைவி: இவ்வீட்டில் இருக்கும் என்னுடைய புகைப்படங்களை எடுத்து விட்டு அவளுடையதை மாட்டுவீர்களா?
கணவன்: அதில் பெரிய தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.

மனைவி: என் கோல்ப்· (GOLF) குச்சிகளை அவள் பயன்படுத்துவாளா? கணவன்: மாட்டாள், அவள் இடது கைப்பழக்கம் உடையவள்!

மனைவி: (புயலுக்கு முன்னே அமைதி!!!) கணவன்: ஐயோ,மன்னித்துகொள் தெய்வமே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக