புதன், 7 மே, 2014

மனிதனாக்கி விடுவோம்

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார். 

அப்போது ஒரு விஞ்ஞானி வந்து, "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை,ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் எங்களுக்கு கற்றுத் தந்து விட்டது. 

அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்த படைப்புத் தொழிலை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.

"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.


"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.

அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம். உடனே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.

அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ தயாரித்த உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.

நன்றி வேதாந்த வைபவம் 18 Oct 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக