செவ்வாய், 13 மே, 2014

எல்லா இடங்களிலும் இறைவன் …

சிறியதோ பெரியதோ எல்லாமே மிகச் சிறிய அணுவின் கூட்டம்தான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரம்பொருளின் வெளிப்பாடுகளே.
பரம்பொருள் கடல்; படைப்புகள் அலைகள்.

அலைகள் தோன்றும்; மறையும்.கடல் நிரந்தரமாக இருக்கும்.

அலைகளில்பேரலை,சிற்றலை என்பது எப்படி அபத்தமோ, அது போலத்தான் மனிதர்களில் பெரியவர், சிறியவர் என்பதும்.

தோன்றுவதற்கு முன் பேரலையும் சிற்றலையும் நீர்தான். மறைந்த பிறகும் நீர்தான்.
நீரில் பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை.

தோன்றுவதற்கு முன் பேரலையும் சிற்றலையும் ஒன்றாகத்தான் இருந்தன. மறைந்த பிறகும் ஒன்றாகத்தான் இருக்கும்.

இதில் பெருமை என்ன? 
சிறுமை என்ன?

இந்த உண்மையைஅறிவது ஞானம்.

எல்லா இடங்களிலும் இறைவன் …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக